அதற்கு நாம் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அவைகள் இதோ,
கேரட்
ஒரு வாரம் தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வந்தால் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற ரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலந்து மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும்.
மீன்கள்
மீன்களில் இருந்து எடுக்கப்படும் ஆயிலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது.
ஏனெனில் இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரித்து, ஞாபக சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.
க்ரீன் டீ
க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் எனும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் உள்ளது. எனவே அதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை கூட மாற்றம் பெறும்.
பெர்ரிஸ்
பெர்ரிப் பழங்களில் குவர்செடின் எனும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் மற்றும் ஆந்தோசையனின் எனும் ஃபோட்டோ கெமிக்கல் உள்ளது. அவைகள் அல்சீமியர் எனும் ஞாபக மறதி நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
கீரைகள்
கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவை ஞாபக சக்தியை அதிகரிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
தேன்
தேன் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
நட்ஸ்
நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் விட்டமின் E மற்றும் B6 உள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யலாம்.
பால்
பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே அவற்றை சாப்பிட்டால், மூளைச் செல்கள் நன்கு செயல்படுவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.