Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் அடிநா அழற்சி என்றால் சாதாரணமான ஒன்று இல்லை அவதானம் .

அடிநா அழற்சி என்றால் சாதாரணமான ஒன்று இல்லை அவதானம் .

4 minutes read

அடிநா அழற்சி என்பது அடிநாச் சதைகளில் ஏற்படும் ஒரு நோய்த்தாக்கம் ஆகும்.

அடிநா அழற்சியின் நோய் அறிகுறிகளில் தீவிரமான தொண்டைப் புண் வலியுடன் கடினமான விழுங்குதல், இருமல், தலைவலி, தசைபிடிப்பு நோய் (தசை வலிகள்), காய்ச்சல் மற்றும் குளிர்நடுக்கம். அடிநா அழற்சி சிவந்த, வீங்கிய அடிநாச் சதையால் குறிப்பிடப்படுகிறது.

இந்த பிரச்சினையிலிருந்து விடுபட மாத்திரைகளை விட வீட்டில் இருக்கும் சில சமையல் அறை பொருட்களை கொண்டு சரி செய்யலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

மிளகுத் தூள்
ஒரு பௌலில் 2 டீஸ்பூன் மிளகுத் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும் . பின்பு ஒரு டம்ளர் சூடான பாலில் இந்த இரண்டையும் சேர்த்து கலந்து அதில்தேனை 1 டீஸ்பூன் கலந்து கொள்ளவும். இந்த பானத்தை ஒருவர் இரவில் படுக்கும் முன் குடித்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு வாரம் பின்பற்றி வந்தால் அடிநா சதை அழற்சி விரைவில் குணமாகும்.

வெந்தய விதைகள்
ஒரு கையளவு வெந்தய விதைகளை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் ஊற வைத்த வெந்தய விதைகளைப் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள்.

இந்த பானம் சற்று குளிர்ந்த பின், அதனைக் கொண்டு வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் இரண்டு முறை என ஒரு வாரம் தொடர்ந்து இந்த பானத்தால் வாயைக் கொப்பளிப்பதன் மூலம், அடிநா அழற்சி சரியாகும்.

துளசி இலைகள்
ஒரு கட்டு நற்பதமான துளசி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளுங்கள்.

பின்பு அதில் துளசி இலைகளைப் போட்டு, தட்டு கொண்டு 5 நிமிடம் மூடி வையுங்கள். அடுத்து அதனை வடிகட்டி, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடியுங்கள். இப்படி ஒரு வாரம் தினமும் குடித்து வந்தால், அடிநா சதை அழற்சி குணமாகும்.

இஞ்சி பொடி
ஒரு பௌலில் 2 டீஸ்பூன் மிளகுத் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் சுக்கு பொடி அல்லது காய்ந்த இஞ்சி பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் 1 டீஸ்பூன் உலர்ந்த துளசி இலைகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். பின் சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை சிறிது வாயில் போட்டு விழுங்குங்கள். அதே சமயம் சிறிதளவை தொண்டையில் தடவிக் கொள்ளுங்கள்.

பூண்டு
3-4 பல் பூண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதில் 2 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை சிறிது வாயில் ஊற்றி குடித்துவிட்டு, எஞ்சியதைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை தினமும் என ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் அடிநா சதை அழற்சி சரியாகும்.

மஞ்சள் தூள்
ஒரு பௌலில் 4 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 4 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த இரண்டையும் நன்கு பேஸ்ட் செய்து, வாயில் சிறிது போட்டு மெதுவாக தொண்டை வழியே விழுங்குங்கள். இப்படி தினமும் 3 முறை என ஒரு வாரம் பின்பற்றினால், அடிநா அழற்சி விரைவில் குணமாகிவிடும்.

எலுமிச்சை
நற்பதமான எலுமிச்சையை இரண்டாக துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பின் அதனை சாறு எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் மிளகுத் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பானத்தை மெதுவாக குடியுங்கள். இப்படி தினமும் குடித்து வர, சீக்கிரம் தொண்டை பிரச்சனை விலகும்.

கடுகு விதைகள்
ஒரு கையளவு கடுகு விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் கடுகு பொடி சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். இந்த நீரால் வாயை சில நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை என 3-4 நாட்கள் செய்து வர, அடிநா சதை அழற்சி குணமாகும்.

அத்திப்பழம
நன்கு கனிந்த 4-5 அத்திப்பழத்தை எடுத்து நீரில் கழுவிக் கொள்ளுங்கள். பின் ஒரு பாத்திரத்தில் 50 மிலி நீர் ஊற்றி, அதில் அத்திப்பழத்தை தட்டிப் போட்டு, அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்பு அதனை அரைத்து, தொண்டையில் பத்துப்போட வேண்டும். இப்படி 2-3 நாட்கள் தொடர்ந்து செய்து வர, தொண்டை பிரச்சனை நீங்கிவிடும்.

சீமைச்சாமந்தி பூ
ஒரு 2 டீஸ்பூன் உலர்ந்த சீமைச்சாமந்தி பூவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி கொதிக்க வைத்து, அதில் சீமைச்சாமந்தி பூவைப் போட்டு 3-5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பின்பு அதனை வடிகட்டி, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இந்த டீயை தினமும் 2-3 முறை என ஒரு வாரம் முதல் 10 நாட்கள் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

உப்புநீர்
உப்பு நீர் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையால் தினமும் பலமுறை வாயைக் கொப்பளித்து வந்தால், அடிநா சதை அழற்சில் இருந்து உடனடி நிவாரணம் கிடைப்பதைக் காணலாம்.

வேப்பிலைப் பொடி
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரில் ஊற்றி, அதில் 1 சிட்டிகை வேப்பிலைப் பொடி, 1 சிட்டிகை மஞ்சள் பொடி, சிறிது உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பின் இந்த பானத்தை குளிர வைத்து, வெதுவெதுப்பான நிலையில் வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் குறைந்தது 3-4 முறை செய்து வந்தால், அடிநா சதை அழற்சியில் இருந்து விரைவில் விடுபடலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More