அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரரை கோட்டே நாக விஹாரைக்கு விஜயம் செய்த
போது சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் உள்ள தற்போதைய அரசியல் முறைமை பற்றியும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினால் மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் தேரர் தூதுவருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் என சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.