உலகில் உள்ள திரைப்பட ஆர்வலர்களுக்காகவும் குறுந்திரைப்படத்தில் திறமை உள்ளவர்களை வெளிக்கொணரும் நோக்கத்திற்காகவும் லண்டனில் குறுந்திரைப்பட விழா நடைபெறுகின்றது. அடுத்தமாதம் மார்கழி 14ம் திகதி லண்டன் வெம்ப்ளி பகுதியில் இறுதி நிகழ்வு நடைபெற உள்ளது.
உலகின் அனைத்து நாடுகளிலுமிருந்து போட்டிகளில் பங்கு பற்றலாம். இம்மாதம் இறுதிக்கு முன் தமது குறுந்திரைப்படங்களை அனுப்பி வைக்கவேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
ஈழத்து சினிமாவின் வளர்ச்சிக்கு இத்திரைப்பட விழாவும் பங்களிப்பு செய்யவுள்ளது. லண்டனில் வெற்றி வானொலி, கிளவுட் மீடியா மற்றும் வணக்கம் லண்டன் இணையம் இணைந்து இந்த விழாவை ஒழுங்கு செய்துள்ளது.