கனடா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராதிகா சிற்சபேசன் நேற்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
சுற்றுலா விசாவில் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்துள்ள அவர் நேற்றுக்காலை தெல்லிப்பழை – மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோரையும் சந்தித்துள்ளார்.
உறவினர் நண்பர்கள் வீட்டிற்கும் சென்ற அவர் வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கும் சென்று மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.