0
சென்னையில் டெசோ கலந்துரையாடல் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் ஐநாவில் கொண்டுவரப்படும் இலங்கைக்கு எதிராக அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும், மீனவர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கச்சதீவில் உரிமையில்லை என்ற மத்திய அரசு தாக்கல் செய்த மனுவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.