த தே கூ பிரித்தானிய செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை கிழக்கு லண்டனில் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக லண்டனில் தங்கியிருக்கும் த தே கூ பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் அரியநேந்திரன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்குகொண்டனர்.
கட்சியின் செயல்ப்பாடுகள் பற்றியும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டதாக இக்கூட்டத்தில் பங்குபற்றிய கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த போதும் குறைந்தளவான உறுப்பினர்களே கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கூட்டத்தில் முக்கிய விடையங்கள் பற்றி ஆராயப்பட்டதாக தெரிவித்தபோதும் என்ன முடிவுகள் எடுக்கப்படன என இதுவரை அறிவிக்கப்படவில்லை.