12
இந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு, ஐரோப்பிய யூனியன் கடந்த ஏப்ரல் மாதம் தடை விதித்தது. இந்த தடையை விலகி்க்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, பிரிட்டிஷ் ஹைகமிஷனர் ஜேம்ஸ் பேவனை, மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் மற்றும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் சந்தித்துப்பேசினர்.