கடந்தவாரம் கிளிநொச்சியில் நடந்த துன்பமான சம்பவத்தின் மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்பிள்ளைகளான பாலசரவணன் நவதாரணி மற்றும் பாலசரவணன் தாட்சாயினி, மற்றுமொரு குடும்பத்தை சேர்ந்த இரத்தினராசா நிசானி என மூன்று சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதை அடுத்து லண்டனை தளமாக கொண்டு இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ( KILI PEOPLE) பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவி தொகையாக தலா 30,000 மற்றும் 20,000 ரூபாக்களை அவ்வமைப்பின் அவசர அனர்த்த நிவாரண நிதி உதவி திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளனர்.