எமது பாடசாலை தொடர்ந்தும் சாதனை படைக்கும். இது எனது உறுதியான நம்பிக்கை என வவுனியா மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் ர.கிரோஸ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ர.கிரோஸ்குமார் தற்போது வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் கணிதப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலை மாணவனாக தெரிவாகியுள்ளார். தனது வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
நான் இந்த நிலையை அடைவதற்கு எனக்கு கற்பித்த ஆசிரியர்களே காரணம். எனக்கு பாடசாலையிலும் வெளியிலும் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எமது பாடசாலை தொடர்ந்தும் சாதனை படைக்கும் இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.