பிரான்சில் நையாண்டி இதழ் “சார்லி எப்டோ” மீது நடந்த தாக்குதலை அடுத்து , தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க 88,000 படையினரும் போலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் பாரிஸ் மற்றும் பிக்கார்டி பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில்தான் தாக்குதல் நடத்தியவர்கள் பலர் ஒளிந்திருப்பதாக நம்பப்படுகிறது என்று உள்துறை அமைச்சர் பெர்னார்ட் காசென்வ்யு கூறினார்.
தேடுதல் வேட்டையில் விமானங்களும் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் காசென்வ்யு கூறினார்.
ஆயுதந்தாங்கிய போலிசார் லாங்போன் என்ற கிராமத்தில் வீடு வீடாகத் தேடி வருவதாக நேரில் கண்ட ஒருவர் கூறினார்
உள்துறை அமைச்சர் காசன்வெயு, கடந்த 24 மணி நேரத்தில் , நாட்டில் பல்வேறு மசூதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும் கண்டித்துள்ளார்.