உலகப் பொருளாதார அமைப்பின் (டபிள்யூ.இ.எஃப்) ஐந்து நாள் உச்சி மாநாடு, சுவிட்ஸர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அதில், உலகம் முழுவதிலும் இருந்து 2,500க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவில் இருந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, எரிசக்தித் துறை அமைச்சர் பியூஸ் கோயல், தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட அரசியல் தலைர்கள், தொழிலதிபர்கள் என 100க்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்த், சீனப் பிரதமர் லீ கெகியாங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், சுவிட்ஸர்லாந்து அதிபர் சைமனேட்டா சோமருகா உள்பட 40 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
கலை நிகழ்ச்சிகளுடன் பொருளாதார அமைப்பின் உச்சி மாநாடு செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கியது.
பொருளாதாரம் தொடர்பான கருத்தரங்குகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள், புதன்கிழமை தொடங்கி, அடுத்த நான்கு நாள்களுக்கு நடைபெறவுள்ளன.
இதில், உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவது குறித்