5
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கோவிலினால் புதிதாக அமைக்கப்பட்ட சிவன் முதியோர் இல்ல கட்டிட திறப்பு விழா இன்று (21-01-2015); வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் திருஞான சம்பந்தர் ஆதீனம் இரண்டாவது குருமகாசந்நிதான ஸ்வாமிகள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் மங்கள வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு ஸ்வாமிகளால் நந்திக்கொடி ஏற்றப்பட்டு இன்று காலை 10 மணியளவில் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதுவரை பராமரிக்கப்பட்டு வந்த 154 முதியவர்களும் இப்புதிய கட்டிடத்தொகுதியில் தங்கவுள்ளனர்.
இந் நிகழ்வின் போது ஸ்வாமிகளின் ஆசியுரையுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.