சிரியாவில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகள் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இத்லிப் மாகாணத்தின் அருகே உள்ள ஹமா மாகாணத்தின் ஜிபீன் நகரில் அரசு படையினருக்கும், ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் ரொக்கெட் குண்டு வீச்சுத்தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கடும் போர் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 21 இராணுவ வீரர்களும், 14 பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி – Benitlas