Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சிரியாவில் தாக்குதல் – 21 இராணுவ வீரர்கள் பலி!

சிரியாவில் தாக்குதல் – 21 இராணுவ வீரர்கள் பலி!

1 minutes read

சிரியாவில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகள் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இத்லிப் மாகாணத்தின் அருகே உள்ள ஹமா மாகாணத்தின் ஜிபீன் நகரில் அரசு படையினருக்கும், ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் ரொக்கெட் குண்டு வீச்சுத்தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கடும் போர் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 21 இராணுவ வீரர்களும், 14 பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி – Benitlas

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More