Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ரயில் பாலம் இடிந்து விழுந்து 18 தொழிலாளர்கள் பலி – விபத்துக்கான காரணம் வெளியானது!

ரயில் பாலம் இடிந்து விழுந்து 18 தொழிலாளர்கள் பலி – விபத்துக்கான காரணம் வெளியானது!

1 minutes read

மிசோரமில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 18 தொழிலாளர்கள் பலியாகினர். இந்த கோர விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கும் தேசிய ரயில்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக மிசோரம் மாநிலத்தின் தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள சாய்ராங் பகுதியில் ரயில்வே பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.

பைராபி மற்றும் சாய்ராங் ரயில் நிலையங்களுக்கு இடையே குருங் ஆற்றுக்கு நடுவே 104 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தன. சுமார் 40 தொழிலாளர்கள் பாலம் கட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

காலை 10 மணியளவில் ரயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் ஈடுபாடுகளில் சிக்கினர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. அவர்களுடன் இணைந்து உள்ளூர் மக்களும் மீட்பு பணிகளுக்கு உதவினர்.

எனினும் இடிபாடுகளில் இருந்து 18 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இடிபாடுகளில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்பதற்கான பணிகளில் மீட்பு குழுக்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

விபத்து தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “மிசோரமில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மிசோரமில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், மிசோரம் ரயில்வே பாலம் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களில் சிலர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் மீட்பு நடவடிக்கையில் உதவிக்காக மிசோரம் அரசாங்கத்துடன் ஒருங்கிணைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்களுக்கு உரிய இழப்பீடு விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் கட்டுமான பணிகளுக்காக ரயில்வே பாலம் மீது பொருத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததன் காரணமாகவே பாலம் இடிந்ததாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More