Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஆசிரியர்கள் தொல்லை… வகுப்பறையில் மாணவன் தற்கொலை!

ஆசிரியர்கள் தொல்லை… வகுப்பறையில் மாணவன் தற்கொலை!

1 minutes read

ராஜஸ்தான் மாநிலம் கொட்புட்லி-பிஹ்ரோர் மாவட்டம் பிரஹ்புரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாணவனான சச்சினுக்கு விவேக் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 ஆசிரியர்களும் ஜாதிய ரீதியில் தொல்லை கொடுத்துவந்தனர்.

இந்நிலையில், சக மாணவர்கள் மத்தியில் சச்சினை ஆசிரியர் திட்டியுள்ளார். மேலும், தேர்வில் தோல்வியடையவைத்து வாழ்க்கையை சீரழித்துவிடுவேன் என மிரட்டி சச்சினை தாக்கியும் உள்ளார்.

இதனால், மன உளைச்சல் அடைந்த மாணவன் சச்சின் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விசாரணையை தொடங்கிய பொலிஸார், மாணவனுக்கு ஜாதிய ரீதியில் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேவேளை, மாணவன் சச்சின் தற்கொலை செய்யவில்லை ஆசிரியர்கள் கொலை செய்துவிட்டதாக கூறி கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரியும், இழப்பீடு வழங்கக்கோரியும் கிராம மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More