Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் ‘கோட்டாவுக்கு எதிராக மீண்டும் வழக்கு’ | ஜஸ்மின் சூக்கா நேர்காணல்

‘கோட்டாவுக்கு எதிராக மீண்டும் வழக்கு’ | ஜஸ்மின் சூக்கா நேர்காணல்

3 minutes read

நேர்காணல்:- ஆர்.ராம்.

பாரிய மனித உரி­மைகள் மீறல்­களில் ஈடு­பட்ட குற்­ற­வா­ளிகள் ,அர­சாங்­கங்கள் மற்றும் அவற்றின் கட்­ட­மைப்­புக்கள் அமெ­ரிக்க அரச திணைக்­க­ளத்தின் நிதி உத­வி­யினை பெற்­றுக்­கொள்ள முடி­யாது என்­பது அந்த நாட்டின் சட்டம் என்பதனடிப்ப­டையில், இலங்கை இரா­ணு­வத்தின் தள­பதி கறை­ப­டிந்­த­வ­ராக கரு­தப்­ப­டு­வதால் முழு இலங்கை இரா­ணு­வ­முமே அமெ­ரிக்க உத­வி­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தகு­தி­யற்­றது என்று சர்­வ­தேச உண்மை மற்றும் நீதிக்­கான செயற்­றிட்­டத்தின் நிறை­வேற்­றுப்­ப­ணிப்­பாளர் யஸ்மின் சூக்கா வீர­கே­ச­ரிக்கு மின்­னஞ்சல் ஊடாக வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்­துள்ளார்.

அச் செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- ஆதா­ரங்கள் சேக­ரிக்கும் பொறி­மு­றை­யொன்றை உரு­வாக்­கு­வது பற்றி ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 46/1 தீர்மானம் குறிப்­பிட்­டி­ருக்­கின்ற நிலையில் அது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­ன­தா­கி­றது?

பதில்:- இது­வொரு முக்­கி­ய­மான முன்­னோக்­கிய படி, ஆனால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்த விடயம் இதுவல்ல, இது­வொரு நீண்ட நிச்­ச­ய­மற்ற செயற்­திட்­டத்தின் ஆரம்­ப­மாகும்.

பொறுப்­புக்­கூறல் மற்றும் நிலை­மா­று­கால நீதிக்­கான உள்­நாட்டு செயல்­மு­றைகள் தோல்­வி­ய­டைந்­தி­ருப்­பதை இந்தத் தீர்­மானம் அங்­கீ­க­ரிப்­ப­தாக உள்­ளது. இலங்கை அர­சாங்­க­மா­னது கடந்த காலத்தில் இடம்­பெற்ற குற்­றங்­களை உள்­நாட்டில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி வழக்குத் தொடர்­வ­தற்­கான முதன்­மை­யான பொறுப்­பினைக் கொண்­டி­ருக்­கின்ற அதே­வே­ளையில் அதனைச் செய்ய இலங்கை அர­சாங்கம் தவ­றி­விட்­டது என்­ப­தனை ஐ.நா. மனித உரி­மைகள் சபையின் தீர்­மானம் ஏற்­றுக்­கொள்­கி­றது.  

இலங்­கை­யானது பொறுப்­புக்­கூ­றலைச் செய்­வ­தற்­கான விருப்­பத்தைக் கொண்­டி­ருக்­கா­மையே சர்­வ­தேச சமூகம் அவ்­வி­ட­யத்தை கையி­லெ­டுத்­தி­ருப்­ப­தற்­கான முக்­கிய கார­ண­மாகும்.

கேள்வி:- ஆதா­ரங்­களைச் சேக­ரிக்கும் பொறி­மு­றையின் செயற்­பா­டு­களை குறிப்­பி­டுங்கள்?

பதில்:– இந்த சுயா­தீனப் பொறி­முறை என்­பது ஒரு வழக்­க­றிஞர் அலு­வ­ல­கமோ அல்­லது ஒரு நீதி­மன்­றமோ இல்லை என்­பதை முதலில் விளங்­கிக்­கொள்­ளுதல் முக்­கி­ய­மா­னது. அது குற்­ற­வா­ளி­களை விசா­ரிப்­ப­து­மில்லை அத்­துடன் வழக்­கு­தொ­டரப் போவதும் இல்லை. இந்தப் பொறி­மு­றை­யா­னது இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட சர்­வ­தேச குற்­றங்கள் பற்­றிய ஆதா­ரங்கள் மற்றும் 

தக­வல்­களைச் சேக­ரிப்­ப­துடன் அது தேசிய, பிராந்­திய அல்­லது சர்­வ­தேச நீதி­மன்­றங்­களில் அல்­லது தீர்ப்­பா­யங்­களில் எதிர்­கால குற்­ற­வியல் வழக்­கு­க­ளுக்கு உத­வு­வ­தற்­கான வழி­களை கண்­டு­பி­டிப்­ப­தற்கு பகுப்­பாய்வு செய்யும். மேலும் உறுதி செய்­யப்­பட்ட ஆதாரங்­களின் அடிப்­ப­டையில் நீதி­மன்­றங்­களும் தீர்ப்­பா­யங்­களும் குற்­றங்கள் தொடர்பில் சட்ட அதி­கா­ரத்தைக் கொண்­ட­தாக எதிர்­கா­லத்தில் உரு­வாக்­கப்­ப­டலாம்.

கேள்வி:- சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத இக் கட்டமைப்பினைப் பயன்படுத்தி எந்த இலக்கை அடையலாம்?

பதில்:- நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு அல்லது சர்வதேசக் குற்ற வழக்கினை உருவாக்குவதற்கு பரவலான அல்லது திட்டமிட்ட தாக்குதல்களுடன் அடிக்கடி தொடர்புபட்ட விரிவான கட்டமைப்பின் ஒரு பகுதியாக இழைக்கப்பட்ட சிக்கலான குற்றங்கள் பற்றியதொரு ஆய்வு அவசியமாகிறது. 

வழமையாக தனிப்பட்ட நபர்களின் குற்றவியல் பொறுப்பினை நிரூபிப்பதற்கு குறிப்பிட்ட காலத்தில் மற்றும் இடத்தில் நடத்தை வடிவங்கள் பற்றிய மதிப்பீடும் அத்துடன் சிக்கலான வலையமைப்புகளில் முறையான மற்றும் முறைசாராத தொடர்புகள் பற்றிய மதிப்பீடும் அவசியமாகிறது. 

பல சிவில் சமூக அமைப்புக்கள் குறிப்பிட்டதொரு புவியியல் அல்லது ஆய்வுப் பகுதி சார்ந்த நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கும் அதேவேளையில் பூரணமானதொரு வழக்குக்கோவையை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் கொண்டிருப்பது சாத்தியமில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More