லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 19ஆவது லீக் போட்டியில், காலி கிளேடியேட்டர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
நேற்று ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், காலி கிளேடியேட்டர்ஸ் அணியும் கண்டி டஸ்கர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காலி கிளேடியேட்டர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் மெண்டிஸ் 68 ஓட்டங்களையும் பிரெண்டன் டெய்லர் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
காலி அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஆமிர், நுவான் துசார, தனஞ்சய லக்ஷான் மற்றும் ஷான் ஆராச்சிகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சந்தகான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 127 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய காலி கிளேடியேட்டர்ஸ் அணி, 17 ஓவர்கள் நிறைவில் வெறும் 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது இதனால் காலி அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக தனுஷ்க குணதிலக்க ஆட்டமிழக்காது 94 ஓட்டங்களையும் ஹஸ்ரதுல்லா ஷசாய் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 66 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 12 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட தனுஷ்க குணதிலக்க தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் காலி அணி அரையிறுதிக்குள் நுழைய, நடப்பு தொடரில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்த கண்டி அணி ஏமாற்றத்துடன் தொடரிலிருந்து வெளியேறியது.