இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வூட் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்த நியமனம் குறித்து கிறிஸ் சில்வர்வூட் தெரிவிக்கையில்,
“ இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளாரான நியமனம் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் இலங்கைக்கு சென்று கடமையைப் பெறுப்பேற்பதில் மிகவும் ஆவலாக உள்ளேன். இலங்கை அணி மிகவும் திறமையான மற்றும் ஆர்வமுள்ள வீரர்களைக்கொண்டுள்ளது. இதேவேளை, இலங்கை அணி வீரர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களை விரைவில் சந்திக்க பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளேன்” என்று தெரிவித்தார்.