Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு csk அணியின் தலைவர் பதவியில் திடீர் மாற்றம்.

csk அணியின் தலைவர் பதவியில் திடீர் மாற்றம்.

1 minutes read


ஐ.பி.எல். சீசனில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வேறு எந்த அணியும் சாதிக்காத வகையில்  9 முறை இறுதி போட்டிக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதில் 4 தடவை (2010, 2011, 2018, 2021) கோப்பையை வென்றுள்ளது.  5 தடவை 2-வது இடத்தை பிடித்தது. 
இவ்வாறு சென்னை அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாக  விளங்கிய கேப்டன் டோனி இந்த சீசனில் இல்லை.

மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, புள்ளி பட்டியலில் 9ம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.

போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன் டோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால், டோனி இல்லாத நிலையில் இந்த சீசனில் சென்னை அணி  எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், ஜடேஜா கேப்டன் பொறுப்பை மீண்டும் டோனியிடம் ஒப்படைக்க உள்ளார் . கேப்டன் பதவியை ஏற்க டோனியும்  சம்மதித்துள்ளார்.

இது தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு:
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியை மீண்டும் எம்.எஸ்.டோனியிடம் ஒப்படைக்கிறார் ஜடேஜா. அவர் தனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தவும், சி.எஸ்.கே. அணியை வழிநடத்தவும் டோனியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில் அணியை வழிநடத்த டோனி ஒப்புக்கொண்டார்.
இவ்வாறு சிஎஸ்கே தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More