ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தானில் இருந்து போட்டியை மாற்றி இலங்கையில் நடந்த திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் மண்ணில் இந்த ஆண்டு செப்டம்பர் 2 முதல் 17ஆம் திகதி வரை நடைபெற இருந்த ஆசிய கோப்பையை இலங்கையில் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தொடர் பாகிஸ்தானில் நடந்தால் இந்தியா பங்கேற்காது மற்றும் எல்லை தாண்டி பயணிக்காது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார்.
இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கை மண்ணில் தொடரை நடத்துவதற்கான நடவடிக்கையை ஆதரிக்கும் நிலையில், போட்டிக்கான இடம் குறித்த இறுதி முடிவு இந்த மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், போட்டியை புறக்கணிக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.