Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 11 லட்சத்து 35 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா

11 லட்சத்து 35 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா

1 minutes read

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது..

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 35 ஆயிரத்தை கடந்துள்ளது. 
குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 717 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,166 பேரும், பிரேசிலில் 571 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 4 கோடியே 14 லட்சத்து 58 ஆயிரத்து 967 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 94 லட்சத்து 36 ஆயிரத்து 214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 74 ஆயிரத்து 78 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 3 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 35 ஆயிரத்து 638 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 2,27,350பிரேசில் – 1,55,459இந்தியா – 1,15,914மெக்சிகோ – 86,893இங்கிலாந்து – 44,158இத்தாலி – 36,832ஸ்பெயின் – 34,366பிரான்ஸ் – 34,048பெரு – 33,937ஈரான் – 31,346

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More