மலேசியாவின் Kampung Semaut, Bentong பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் குழந்தைகள் உள்பட இந்தோனேசியாவைச் சேர்ந்த 46 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் Pahang குடிவரவுத்துறை இத்தேடுதல் வேட்டையினை நடத்தியிருக்கிறது. இதில் 19 ஆண்கள், 22 பெண்கள், 2 சிறுவர்கள், மற்றும் 3 குழந்தைகள் கைது செய்யப்பட்டதாக Pahang குடிவரவுத்துறை இயக்குனர் முகமது ஹட்டா கஷிம் தெரிவித்திருக்கிறார்.
“மூன்று மணி நேரம் நடந்த இத்தேடுதல் நடவடிக்கையில் Kampung Semaut பகுதியில் உள்ள 90 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாக கஷிம் குறிப்பிட்டிருக்கிறார்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆவணங்களின்றி தங்கியிருந்தல் அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியிருந்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
Kemayan குடிவரவுத்தடுப்பு மையத்துக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக இவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டிருக்கீறது.