லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கி 43 அகதிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு மேற்கே கடற்கரை நகரான ஷவையா உள்ளது. இந்நகரில் இருந்த படகு ஒன்றில் அதிகளவான அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
படகு புறப்பட்டு சில மணி நேரம் பயணித்த நிலையில் திடீரென படகின் இயந்திரம் பழுதாகியுள்ளது. இதனால் நிலை தடுமாறிய அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்ததுள்ளது.
எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் படகில் பயணித்த பெரும்பாலானோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒருசிலர் நீந்தி உயிர் தப்பியுள்ளனர்.
விபத்தில் 43 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்ததோடு 10 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஏற்கனவே இந்த பகுதியில் இதுபோன்ற விபத்துக்கள் பலமுறை நடந்துள்ளன. இந்த ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியில் படகு கவிழ்ந்து அகதிகள் உயிரிழந்தது இதுவே முதல்முறை ஆகும்.
படகில் அதிகளவானவர்கள் பயணித்தமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது.