திரவமாக்கப்பட்ட 180 டன் மருத்துவ ஒட்சிசனை 11 டேங்கர்கள் மூலமாக அவசர நிலை அடிப்படையில் இந்தியாவிடருந்து பங்களாதேஷ் பெற்றுக்கொண்டுள்ளது.
வைத்தியசாலைகளில் கொவிட் – 19 தொற்றாளர்கள் மற்றும் ஏனையோருக்கு ஒட்சிசன் விநியோகத்தை உறுதி செய்வதற்கான தெற்கு பங்களாதேஷில் போராட்டத்தின் மத்தியில் இது இடம்பெற்றதுடன், வைத்தியசாலைகளில் அதிகரித்து வரும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையானது மருத்துவ ஒட்சிசன் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஒட்சிசனானது லிண்டே, ஸ்பெக்ட்ரா மற்றும் பியோர் ஒக்சிசன் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.