“ஜனாதிபதியின் தோற்றுப்போன மனநிலையை உலகிற்கு காட்டி நிற்கின்றது நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு”என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும் விவசாயத்தை தமது ஜீவனோபாயமாக கொண்டு வாழ்ந்துவரும் மக்கள், இயற்கை விவசாயம் என்ற அரசாங்கத்தின் கொள்கையால் பின்னடைவை சந்தித்துள்ளனர் என கூறினார்.
இருப்பினும் விவசாயத்திற்கு உரத்தை இறக்குமதி செய்வதாக அரசாங்கம் கூறினாலும் தமிழ் மக்கள் அதனை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பது குறிப்பிட்ட தக்கது என்றார்
மேலும் சர்வதேச நாணய நிதியம் மற்றம் உலக வங்கியின் உதவியை நாடப்போவதில்லை என கூறியவர்கள் இப்போது அவர்களிடம் செல்ல முடிவெடுத்திருப்பது அவர்களது இயலாமையை வெளிகொண்டு வந்துள்ளது என தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை நாடும் மக்களும் சந்தித்திருக்கின்ற இந்த நேரத்தில், உரிய நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் வழியமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.