புதிய அணுவாயுதங்களை உருவாக்குவதில் சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது என தெரிவித்துள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் எனினும் தற்பாதுகாப்பு நோக்கத்துடன் மாத்திரமே அவற்றை பயன்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.
சீனா அணுவாயுதங்களை முதலில் பயன்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார் – அமெரிக்க பாதுகாப்புஅமைச்சர் லொயிட் ஒஸ்டினை சிங்கப்பூரில் இடம்பெறும் சங்கிரி லா பேச்சுவார்த்தைகளி;ன் போது சந்தித்தவேளை வெய் பெங்கே இதனை தெரிவித்துள்ளார்.
கிழக்கு சீனாவில் அணுவாயுதங்களை ஏவுவதற்கான 100 தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள சீனாவின் வெளிவிவகார அமைச்சர் நாட்டின் பாதுகாப்பிற்காக அணுவாயுத தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக சீனா பொருத்தமான பாதைகளை பயன்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
2019 இல் சீனாவில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட அணுவாயுதங்கள் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன அவற்றை பயன்பாட்டிற்கு ஏற்ற விதத்தில் நிலைகொள்ளச்செய்துள்ளோம் என சீன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து தசாப்தங்களாக சீனா தனது அணுதொழில்நுட்ப திறனை அபிவிருத்தி செய்துள்ளது சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் கொள்கை தொடர்ச்சியானது நாங்கள் தற்பாதுகாப்பிற்கு அவற்றை பயன்படுத்துவோம் நாங்கள்முதலில் அதனை பயன்படுத்தமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் அமைதி சமாதானத்தையும்ஸ்திரதன்மைiயும் ஏற்படுத்தவே முயல்கின்றது ஆக்கிரமிப்பாளன் இல்லை என தெரிவித்துள்ளார்.