ஜப்பானை இதுவரை தாக்கிய மிகப்பெரிய புயல் ஒன்று தெற்கு தீவான கியுசுவில் கரையை அடைந்துள்ளது.
நன்மடோல் என்ற பெயர் கொண்ட இந்தப் புயல் மணிக்கு குறைந்தது 180 கி.மீ வேகத்தில் காற்றை கொண்டுவந்துள்ளது. சில பகுதிகளில் 500 மி.மி மழையை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது நான்கு மில்லியன் மக்களை தமது வீடுகளில் இருந்த வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் எதிர்பார்க்கப்படும் நிலையில் புல்லட் ரயில் சேவைகள், படகு மற்றும் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் புயல் கியுசுவின் தெற்கு முனையான ககொசிமாவில் நேற்றுக் காலை கரையை அடைந்தது.
நன்மடோல் இந்தப் பருவத்தின் 14ஆவது புயலாகும். ஜப்பானில் இது புயல் காலம். ஆண்டுக்குச் சுமார் 20 புயல்கள் வீசுவது வழக்கம்.