நியூசிலாந்தில் கேப்ரியல் சூறாவளியால் (Cyclone Gabrielle) இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் வடக்கு தீவை புயல் தாக்கி ஒரு வாரமான நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் காணமல் போயுள்ளனர்.
பெப்ரவரி 12 ஆம் திகதி தீவின் வடக்குப் பகுதியைத் தாக்கிய சூறாவளி, கிழக்குக் கரையோரத்தில் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. கேப்ரியல் சூறாவளியானது, நியூசிலாந்தின் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இயற்கை பேரழிவு என்று பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறியுள்ளார்.
இதேவேளை, சூறாவளி தொடர்பான சூழ்நிலைகளில் கடுமையாக பாதிக்கப்பட்ட மேலும் இருவர் ஞாயிற்றுக்கிழமை (19) பேர் இறந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், 6,431 பேரைக் காணவில்லை, அதே நேரத்தில் 3,216 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், மேலும் உயிரிழப்புகள் சாத்தியமாகும் என, தலைநகர் வெலிங்டனில் ஊடகவியலாளர்களிடம் பிரதமர் ஹிப்கின்ஸ் கூறினார்.
விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்து, பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், 28,000 வீடுகள் இன்னும் மின்சாரம் இல்லாமல் உள்ளதாக அவர் கூறினார்.