பொதுமக்களின் பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில், அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கான சட்டத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கையெழுத்திட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகை இது குறித்து இன்று சனிக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது.
பிரான்சின் அரசியலமைப்பு கவுன்சில் ஓய்வூதிய வயது அதிகரிப்புக்கு நேற்று வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது.
இதன்படி, அரச ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வயது 62 இருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தச் சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி தொழில் சங்கப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி : பிரான்ஸில் மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்