காலிஸ்தான் ஆதரவாளர்கள் 17 பேர் அமெரிக்காவிலுள்ள குருத்வாராவில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக கைது.
இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஐக்கிய அமெரிக்காவில் வெறும் வன்முறையாளராக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளானர் . இத்தகைய காலிஸ்தான் ஆதரவாளர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டதுடன் பொலீசார் அவர்களிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் மிஷின்கன் வகை துப்பாக்கிகளையும் மீட்டனர்.
பொலீசார் 2022ம் ஆண்டில் ஸ்டாக்டன் பகுதியிலும், கடந்த மார்ச் மாதம் சாக்ரமென்டோ பகுதியிலும் சீக்கிய கோயில்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக வடக்கு கலிபோர்னியாவில் 20 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியா போதே இவர்கள் சிக்கினர்.
கைதானவர்களில் 2 பேர் இந்தியாவில் பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எனவும், அமெரிக்காவில் பல இடங்களில் மாபியா தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.