கடந்த மாதம் இஸ்ரேல் – கலிலி கடற்கரைக்கு பயணித்த இங்கிலாந்து பெண் ஒருவரையும் அவரது இரு மகள்களையும் சுட்டுக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பாலஸ்தீனிய போராளிகளைக் கொன்றுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
அத்துடன், மேற்படி இருவருக்கும் உதவியதாகக் கூறப்படும் மூன்றாவது போராளியும் நப்லஸ் நகரில் நடந்த மோதலில் கொல்லப்பட்டார் எனவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியப் படையினருடனான இந்த மோதலில் பல பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி : இஸ்ரேலில் கொல்லப்பட்ட லண்டன் சகோதரிகள்