காங்கோ நாட்டில் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால் இரு கிராமங்களை மூழ்கடித்த வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 4ம் திகதியன்று கலேஹே பகுதியில் இருந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியது. ஒரு கட்டத்தில் வெள்ளம் அதிகமாக ஆற்றின் இருபுறமும் இருந்த கரைகள் உடைய தொடங்கின.வெள்ளம் கலேஹே ஊருக்குள் நுழைந்தது. இது தன் வழியில் இருந்த அனைத்தையும் அடித்துக்கொண்டு சென்றுவிட்டது.
மேலும் தெற்கு கிவு மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த திடீர் மழையால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. புஷுஷு மற்றும் நியாமுகுமி வெள்ளத்தில் மூழ்கின.
வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமான நிலையில், இதுவரை 401 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அம்மாகாண ஆளுநர் தியோ நக்வாபிட்ஜே காசி தெரிவித்துள்ளார்.
இந்நாளை தேசிய துக்க நாளாக காங்கோ அரசு அறிவித்துள்ளது.