அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் காரை ஓட்டி, அது விபத்துக்குள்ளான பிறகு கடுமையாகக் காயமடைந்த காதலியைக் காரிலேயே விட்டுச்சென்றுள்ளார்.
இந்தக் குற்றத்துக்காக குறித்த இளைஞனுக்கு 4 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
எப்பிங் (Epping) நகரின் ஹவ்ப்லொன்ஸ் மலையில் (Houblons Hill) உள்ள ஒரு காரில் 20 வயது ஜெஸ் வாட்டர்மேனைக் (Jess Waterman) என்று யுவதியை, பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனையடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் யுவதி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் 33 வயது நேத்தன் டவர்ஸ் (Nathan Towers) எனும் இளைஞன் கைதுசெய்யப்பட்டார்.
அவர், கார் ஓட்டுவதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கவில்லை. அவர் ஓட்டிய கார் கட்டுப்பட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த தனது காதலியை, டவர்ஸ் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுச்சென்றிருக்கிறார். கைது செய்யப்படுவோமோ என்ற பயத்திலேயே அவர் சம்பவ இடத்தைவிட்டுச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.