Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இளம்பெண் விவகாரத்தில் இத்தாலி பிரதமரின் கணவர் சர்ச்சை கருத்து

இளம்பெண் விவகாரத்தில் இத்தாலி பிரதமரின் கணவர் சர்ச்சை கருத்து

1 minutes read

இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் கணவர் ஆண்டிரியா கியாம்புருனோ. இவர் தொலைக்காட்சியில், டெய்லி டைரி என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

அதில், அவர் பேசியது தற்போது இத்தாலியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, சிசிலி நகரில் பாலர்மோ பகுதியில் இளம்பெண் ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை அந்நாட்டினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், கியாம்புருனோ அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, நீங்கள் நடனம் ஆட சென்றால், குடிப்பதற்கான ஒவ்வோர் உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. எந்தவித தவறான புரிதலும் இருக்க கூடாது. எந்தவித பிரச்சனையும் இருக்க கூடாது.

ஆனால், நீங்கள் மதுபானம் குடிப்பது மற்றும் உணர்வை இழப்பது ஆகியவற்றை தவிர்த்து விட்டால், சில பிரச்சனைகளில் சிக்காமல், ஓநாய் ஒன்றின் முன் நீங்கள் வராமல் தவிர்க்கலாம் என பேசினார்.

இதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போதிப்பதற்கு பதிலாக, இளம் ஆடவர்களுக்கு மரியாதையை வெளிப்படுத்துவது பற்றி கற்று தர வேண்டும் என்று கியாம்புருனோவுக்கு கூறி கொள்கிறேன்.

ஒப்புதலுக்கான மதிப்பை ஆண்களுக்கு கற்று கொடுங்கள் என எதிர்க்கட்சியை சேர்ந்த செசிலியா டிஎலியா கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More