கேக் தயாரிக்கும் போது இயந்திரத்தில் தாவணி சிக்கியதால் மகனின் கண்முன்னே தாய் ஒருவர் துடிதுடித்து இறந்துள்ளார்.
கிழக்கு மத்திய பிரான்சில் ஆவெர்க்னே-ரோன்ஸ்-ஆல்ப்ஸ் பிராந்தியத்தை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 58 வயதான பெண்ணே இவ்வாறு இறந்துள்ளார்.
குறித்த பெண் தனது 15வயது மகனுடன் கேக் தயாரிக்கும் போது தாவணி உணவு கலவையில் சிக்கிக்கொண்டதால் இறந்துள்ளார்.
மகன் அவசரகால சேவைக்கு அறிவித்ததன் பின் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகவும் மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்தவும் அதிகாரிகள் பிரேத பரிசோதனை நடத்த உள்ளனர்.