பிரித்தானியாவின் நிதியமைச்சர் ரிஷி சுனாக் பிரித்தானியாவின் பட்ஜெட்டை அடுத்த மாதம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தாக்கல் செய்யவுள்ளார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமரான போரிஸ் ஜோன்சன், தன் அமைச்சரவையில், இந்திய வம்சாளியைச் சேர்ந்தவரும், இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனுமான, ரிஷி சுனாக், பிரித்தானியாவின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.
நாராயணமூர்த்தியின் மகளான, அக்ஷதாவை திருமணம் செய்துள்ள ரிஷி சுனாக், முதல் முறையாக, பிரித்தானியாவில் 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, பிரித்தானியா பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். அதன் பின் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய தலைவராக உருவெடுத்தார்.
இந்நிலையில், அடுத்த மாதம் 11ம் திகதி பிரித்தானியாவின் பட்ஜெட்டை ரிஷி சுனாக் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், இந்தியர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எதிர்வரும் March மாதம் 11ம் திகதி என்னுடைய முதல் பட்ஜெட்டுக்கான தயாரிப்பு தான் இது, நிச்சயமாக பிரித்தானியா மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை இது வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.