கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவை விட ஐரோப்பிய நாடான இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி 793 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒரே நாளில் பதிவான ஆக கூடிய மரண எண்ணிக்கை இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இத்தாலி பிரதமர் கியுஸ்பி காண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதையடுத்து, நாட்டில் செயல்படும் முக்கியத்துவம் இல்லாத நிறுவனங்களை மூடும்படி உத்தரவிட்டுள்ளார்.