தமிழிசைக்கு நன்றி தெரிவித்த மாணவி ஜீவிதா, அரசு பள்ளியில் படித்தாலும், தன்னம்பிக்கை இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என்றார்.
சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த தையல் தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவரின் மகள் ஜீவிதா நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் பெற்றார்.
அரசுப் பள்ளியில் படித்த மாணவி ஜீவிதா ஏழ்மை காரணமாக மருத்துவ கல்லூரியில் சேர்வதில் சிரமப்பட்டார்.
இந்நிலையில் மாணவி ஜீவிதாவுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உதவி முன்வந்தார்.
இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், நேரில் சென்று மாணவி ஜீவிதாவை தமிழிசை பாராட்டினார்.
அப்போது அவருக்கு நன்றி தெரிவித்த மாணவி ஜீவிதா, அரசு பள்ளியில் படித்தாலும், தன்னம்பிக்கை இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என்றார்.
அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்றஅனகாபுத்தூர் மாணவி ஜீவிதாவின் இல்லத்திற்கு சென்று மாணவியின் விடாமுயற்சியை பாராட்டி ஊக்கப்படுத்தினேன், மீண்டும் முயற்சித்தால் முடியுமென்று முன் உதாரணமாக திகழும் மாணவிக்கும்,ஊக்கப்படுத்திய அவரது பெற்றோர்களுக்கும் பாராட்டுக்கள் pic.twitter.com/AIbxT80TqI
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) June 8, 2019
நன்றி – Web Desk