உனா மாவட்டத்தின் ஹரோலி பகுதியை சேர்ந்த லவ் தீப் என்ற 8 மாத பெண் குழந்தையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்துள்ளது.
மேலும் விபத்தில் படுகாயடைந்த ஹரோலி பகுதியை சேர்ந்த 5பேருக்கு மாநில வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இமாச்சல் பிரதேசத்தில் காங்ரா மாவட்டத்திற்கு வருகை வந்த சுற்றுலா பயணிகள், பாக்சு நாக் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, தரம்சாலா பகுதியிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவிலுள்ள பாக்சு நாக் நீர்வீழ்ச்சி நோக்கி நடந்து சென்றுள்ளனர்.
இதன்போது அவர்கள் சென்ற மலை பகுதியின் வழியில், பெருங்கற்கள் திடீரென சரிந்து விழுந்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.