0
அசாம் மாநிலத்தில் வெவ்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள், மூளைக்காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர்.
குறித்த 4 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளனர்.
இதனால் மாநிலத்தில், மூளைக்காய்ச்சலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.
அசாமில் மூளைக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட பலர், மாநிலம் முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.