Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இலங்கை அகதிகள் நலத்திட்டத்தில் முறைகேடுசெய்த நால்வருக்கு கடூழிய சிறைத்தண்டனை

இலங்கை அகதிகள் நலத்திட்டத்தில் முறைகேடுசெய்த நால்வருக்கு கடூழிய சிறைத்தண்டனை

1 minutes read

இலங்கை அகதிகள் நலத்திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட நால்வருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தமிழகத்தின் கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை விருத்தாச்சலம் மற்றும் கடலூர் பகுதிகளில் இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசு அறிவித்த நலத்திட்டங்களில் போலி ஆவணங்களின் மூலம் 50,88,000 ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அப்போதைய விருத்தாச்சலம் – திட்டக்குடி வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள் மற்றும் இடைத்தரகர் சதாசிவம் உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விருத்தாச்சலம் கோட்டாட்சியராக இருந்த பாஷா என்பவர் ஏற்கனவே உயிரிழந்தமையினால் பதில் வட்டாச்சியராக கடமையாற்றிய திட்டக்குடி தாசில்தார் மற்றும் துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட நால்வருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More