கொரானா ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து விதி கடுமையாக்கபட்டதால் மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கபட்டது.இதனால் தாங்கள் விளைவித்த காய்கறிகளை வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காரட் உள்ளிட்ட காய்கறிகள் சேதமடை வதால் வேறு வழியின்றி இவைகளை மாடுகளுக்கு தீவனம் ஆக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் .இந்த நிலை நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் நடை பெற்று வருகிறது.
-வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்-