இந்தியாவில் ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்களில் கடும் நெருக்கடிக்கிடையே கர்ப்பிணி பெண்களும் பயணித்தனர்.
அவர்களில் 30 பேருக்கு பயணித்தின் போதே குழந்தைகள் பிறந்தன. புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் நலமுடன் உள்ளதாகவும், அவர்கள் பயணிக்க சிறப்பு ஏற்பாடுகளை ஏற்கெனவே செய்திருந்ததாகவும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஆர்.டி. பாஜ்பாய் தெரிவித்தார்