பிற்போடப்பட்டிருந்த இந்திய பிரீமியர் லீக் 2020 கிரிக்கெட் போட்டி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 08ஆம் திகதிக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, IPL கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பிரிஜேஸ் பட்டேல் தெரிவித்தார்.
இப்போட்டித் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு இருந்த 2020 இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர், கொவிட்-19 பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் போட்டிகள் நடத்தப்படும் முறை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.