Saturday, May 11, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா குஜராத்தில் கனமழை: பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கின

குஜராத்தில் கனமழை: பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கின

1 minutes read

குஜராத்தில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழை காரணமாக, அங்குள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும், கனமழை காரணமாக ஆற்றங்கரையோர நகரங்கள், நீரினால் மூழ்கி காணப்படுவதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்திலுள்ள அகமதாபாத், காந்திநகர்,  சுரேந்திரநகர்,  ராஜ்கோட், மேக்சானா உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாகப்  கனமழை பெய்து வருகிறது.

இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 108அணைகள் நிரம்பி வழிந்தோடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள மோதிசார் அணையில் 14மதகுகளைத் திறந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோன்று சுரேந்திர நகர் மாவட்டத்திலுள்ள திரிவேணி தங்கா அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குஜராத்தில் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு உள்ளதென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More