Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கொரோனா வைரஸ் : ஆந்திராவில் இன்று தடுப்பூசி ஒத்திகை!

கொரோனா வைரஸ் : ஆந்திராவில் இன்று தடுப்பூசி ஒத்திகை!

1 minutes read

கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி ஒத்திகை ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில் அவற்றை வினியோகிப்பதற்கான திட்டங்களை வகுப்பதில் மத்திய-மாநில அரசுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

இந்த திட்டத்தை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக 4 மாநிலங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதில் தடுப்பூசி போடுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வழிமுறைகள் அனைத்தும் சோதிக்கப்படுகிறது.

இந்த ஒத்திகைக்காக 25 பயனாளர்கள் (சுகாதார ஊழியர்கள்) தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 5 அமர்வுகளாக நடைபெறும் இந்த ஒத்திகையின்போது ஒவ்வொரு அமர்விலும் இந்த ஊழியர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த ஒத்திகை நிறைவடைந்ததும், அது தொடர்பான அறிக்கை மத்திய-மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More