இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்கிழமை) ஒரேநாளில் 13ஆயிரத்து 795 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 59 இலட்சத்து 6 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 24 இலட்சத்து 5 ஆயிரத்து 92 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் 1 இலட்சத்து 98 ஆயிரத்து 596 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 161 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 52 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது.