நாடு முழுவதும் இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதன்கிழமை மாலை 6 மணி வரை 1 இலட்சத்து 12 ஆயிரத்து 7 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அவர்களில் 82 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 7 இலட்சத்து 86 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் 36 ஆயிரத்து 211 பேருக்கும், ஆந்திரத்தில் 22 ஆயிரத்து 548 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 16 ஆயிரத்து 261 பேருக்கும் மத்திய பிரதேசத்தில் 6 ஆயிரத்து 731 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.