மும்பை: ஒன்றிய பட்ஜெட் உரையை தொடர்ந்து சரிந்த பங்குச்சந்தைகள், மாலையில் ஏற்றம் கண்டன. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை 848 புள்ளிகள் உயர்ந்தது. ஒன்றிய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 58,672.86 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கியது.
பட்ஜெட் உரையில் இடம் பெற்றிருந்த அறிவிப்புகளுக்கு ஏற்ப, பங்குச்சந்தையின் போக்கு காணப்பட்டது. பட்ஜெட் உரையின்போது பெரிய அளவில் ஏற்றமோ மாற்றமோ ஏற்படவில்லை.
மாறாக, பட்ஜெட் உரை முடிந்த பிறகு மதியம் வர்த்தக இடையில் பங்குச்சந்தை முந்தை நாளை விட 1,125 புள்ளிகள் சரிந்து 57,737.66 புள்ளிகளானது.